Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்

புதுக்கோட்டை

புத்தகதிருவிழாபோட்டிகளைத் தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா உரையாற்றினார்

புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்  புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் வருகின்ற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 6 வரை நடத்துகிறது.

புத்தகத் திருவிழாவையொட்டி ஒன்றிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு மாவட்ட அளவிலான இறுதிப்போட்டி திங்கள் கிழமை புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

போட்டிகளுக்கான தொடக்க  நிகழ்வுக்கு  பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா  போட்டிகளைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தங்கம்மூர்த்தி, அ.மணவாளன், எஸ்.டி.பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, ராசி.பன்னீர்செல்வம், க.சதாசிவம், ஸ்டாலின் சரவணன் ஆகியோர் பேசினர். போட்டிகளை கு.ம.திருப்பதி, மகா.சுந்தர், மு.கீதா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பேச்சுப்போட்டி: 6,7,8 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை ம.சக்திதரர் (மௌண்ட் சியோன் மெட்ரிக் பள்ளி, புதுக்கோட்டை), த.பரிவாதினி (ஊ.ஒ.ந.பள்ளி-காட்டுநாவல்), ப.மோனிஷா(ஊ.ஒ.ந.பள்ளி, எருக்குமணிப்பட்டி), 9, 10 வகுப்பு வகுப்புகளில் ச.கஹானா (அ.ம.மே.நி.பள்ளி, சந்தைப்பேட்டை), செ.சுனில்பிரதாப் (அமலா அன்னை மே.நி.பள்ளி,பொன்னமராவதி), ம.ஸ்ரீநிதி (அ.ம.மே.நி.பள்ளி, கறம்பக்குடி), 11, 12 வகுப்புகளுக்கு ச.ஸ்ரீஹாசினி (ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளி, திருக்கோகர்ணம்), இரா.பரமளேஸ்வரி (அ.ம.மே.நி.பள்ளி  கறம்பக்குடி), சீ.இராஜஸ்ரீ (அ.ம.மே.நி.பள்ளி, மணமேல்குடி) ஆகியோர் பெற்றனர்.

கவிதைப்போட்டி: 6,7,8 வகுப்புகளில் க.புவனாஸ்ஸ்ரீ (ஊ.ஒ.ந.நி.பள்ளி, தட்டாமனைப்பட்டி), ரா.ராகவி ( அன்னை மெட்ரிக் மே.நி.பள்ளி, நச்சாந்துப்பட்டி), அ.காவ்யா (அ.பெ.மே.நி.பள்ளி, அரிமளம்), க.தனிஷ்கா (இராணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை), 9,10 வகுப்புகளில், பா.பிரியதர்ஷினி (அ.ம.மே.நி.பள்ளி), பீ.முகமது தாஹீர் (தூய மரியன்னை ஆ.மே.நி.பள்ளி, புதுக்கோட்டை).

புதுக்கோட்டை
புத்தக திருவிழா போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள்

ப.த.மிஸ்லியா (அன்னை மேட்ரிக் மே.நி.பள்ளி, நச்சாந்துப்பட்டி), 11, 12 வகுப்புகளுக்கு நெ.விஜய ராமானுஜம் (அமலா அன்னை மே.நி.பள்ளி, பொன்னமராவதி), கரிஷ்மா ரோஸ் (அ.பெ.மே. நி.பள்ளி, கீரனூர்) ச.மணிகண்ட பாலமுருகன் (அ.ஆ.மே.நி.பள்ளி, ஆலங்குடி), ஆ.ஹேமலதா (அ.மே.நி.பள்ளி, அன்னவாசல்) ஆகியோர் பெற்றனர்.

ஓவியப்போட்டி: 6,7,8 வகுப்புகளில் கோ.வருண்ராஜ் (அ.ஆ.மே.நி.பள்ளி, ஆலங்குடி), அ.ஹரீஸ் (அ.உ.நி.பள்ளி, துலையனூர்), சே.கனிஷ்கா (மான்போர்ட் சிபிஎஸ்இ பள்ளி, அழியாநிலை), 9,10 வகுப்புகளில் எஸ்.கிஷோர் (அ.ஆ.மே. நி.பள்ளி, அறந்தாங்கி), பா.சுவாதி (அ.மே.நி.பள்ளி, அரிமளம்), கே.வை~;ணவி (அ.ம.மே.நி.பள்ளி, கறம்பக்குடி), 11, 12 வகுப்புகளில் பொ.தேஸன்யா (லயன்ஸ் பதின்ம மே.நி.பள்ளி, பொன்னமராவதி), பா.நித்யாஸ்ரீ (விவேகா மெட்;ரிக் பள்ளி, விராலிமலை), பா.கோகுல் (அ.ஆ.மே.நி.பள்ளி, ஆலங்குடி ஆகியோர் பெற்றுள்ளனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழா மேடையில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top