Close
செப்டம்பர் 19, 2024 11:12 மணி

தேசம் காப்போம்… வங்கிகளைக் காப்போம்… வங்கி ஊழியர்களின் வாகனப் பிரசார குழுவை வரவேற்ற சின்னத்துரை எம்எல்ஏ

புதுக்கோட்டை

தேசம் காப்போம். வங்கி ஊழியர்களின் வாகனப் பிரசாரக்குழுவுக்கு எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது

வங்கி ஊழியர் சங்கம் நடத்தும் தேசம் காப்போம் வாகனப் பிரசாரப் பயணக்குழுவினருக்கு  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசு  பொதுத்துறை மற்றும் கிராமப்புற கூட்டுறவு வங்கிக ளை காப்பாற்ற வலியுறுத்தி தமிழகத்தில் 4000 கிலோ மீட்டர் வேன் பிரச்சார பயணம் “தேசம் காப்போம். வங்கிகளைக் காப்போம்” எனும் பிரசார பயணம் சனிக்கிழமை திருச்சியில் நிறைவுபெறுகிறது.

அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளன மாநில தலைவர் எஸ்.பிரேமலதா, மாநில செயலாளர் சி.பி.கிருஷ்ணன், அகில இந்திய துணை செயலாளர் சுனில்குமார், மாநில தலைவர் சர்வேசன், கூட்டுறவு சங்க மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பயணக் குழுவினர் சனிக்கிழமை காலையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.

புதுக்கோட்டை
கந்தர்வகோட்டைக்கு வந்த தேசம் காப்போம்.வங்கி ஊழியர்களின் வாகனப் பிரச்சாரக்குழு

பிரசாரக் குழுவிற்கு கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை   வரவேற்பு அளித்து பேசியதாவது:

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் நம்பியிருக்கும் வங்கிகளை அரசு தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். வங்கி ஊழியர்கள்,  வாடிக்கையாளர்களின் நலன்களை ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு, கிராம கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அ.ராமையன்,  அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துகுமார், இந்திய ஜனநாயக வாலிபர் வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் கு.ராஜேஷ், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் வெ.ரெத்தினவேல், கோ.பன்னீர்செல்வம், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.ஜனார்த்தனன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top