Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

ஜூலை 18 முதல் 23 வரை தமிழ்நாடு நாள் விழா.. புகைப்படக் கண்காட்சியை கண்டுகளித்த மாணவிகள்

புதுக்கோட்டை

தமிழ்நாடு நாள் விழா புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரி மாணவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு    ஜூலை 18 முதல் 23 வரை நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியினை, மாணவிகள் கண்டு களித்தனர்.

ஜூலை 18 -ஆம் தேதி  தொடங்கிய இப்புகைப்படக் கண்காட்சியை ஏராளமான அலுவலர்கள், பொதுமக்கள் நாள்தோறும் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவியர்கள் 150 -க்கும் மேற்பட்டோர் ‘தமிழ்நாடு நாள் விழா” புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை.யில் நடந்த தமிழ்நாடு நாள் விழா புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்

மேலும் புதுக்கோட்டை நகராட்சி, சந்தைப்பேட்டை மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட மாணவியர்கள் ‘தமிழ்நாடு நாள் விழா’ புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டுச்சென்றனர்.

இந்நிகழ்ச்சியில், மகளிர் கலைக்கல்லூரி பேராசிரியர்கள் ஏ.தனலட்சுமி, .டி.வசந்தகுமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) அ.பாரதி, ஆசிரியர்கள் பிரமிளா, சுதாவசந்தி, கலையரசி,அமுதா, சுகன்யா, அலுவலக மேலாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top