Close
செப்டம்பர் 20, 2024 1:35 காலை

எய்டு இந்தியா நிறுவனம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை

செம்பாட்டூர் பகுதியில் எய்டு இந்தியா சார்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை அருகே  செம்பாட்டூர், வள்ளி நகர், ரங்கம்மாள் சத்திரம் மற்றும் காமராஜர் நகர் ஆகிய பகுதிகளில் பல்வேறு வகையான பழ மரக்கன்றுகளும், மற்றும் செம்மரம், தேக்கு உள்ளிட்ட மரக்கன்றுகளும் வழங்கி நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி கட்டுமானார் தொழிலாளர் நல சங்க மாநில துணைத்தலைவர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top