Close
செப்டம்பர் 20, 2024 1:19 காலை

முகநூலில் முதல்வரை தரக் குறைவாக விமர்சித்த பாஜக பிரமுகர் கைது

புதுக்கோட்டை

அவதூறு வழக்கில் பாஜக பிரமுகர் கைது

முகநூலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தரக் குறைவாக விமர்சித்ததான புகாரின் பேரில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே நாகுடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரசர்குளம் மேல்பாதியைச் சேர்ந்தவர் பெ. சாத்தன் மகன் பழனியப்பன் (40). இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
இவர் தனது முகநூல் கணக்கில் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் குறித்து தரக் குறைவாக விமர்சனம் செய்து பதிவிட்டதாக, அறந்தாங்கி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் செந்தில்வேலன், அறந்தாங்கி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் அளித்தார்.
இந்தப் புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸார், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பழனியப்பனை செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top