Close
செப்டம்பர் 19, 2024 11:25 மணி

பாமக தலைவர் அன்புமணிராமதாஸ் கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர்

நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்ததை கண்டித்து புதுக்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே கையில் கட்சி கொடியை ஏந்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரையரசன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது

என்எல்சி நிர்வாகம் விவசாய நிலங்களை அழித்து பைப்லைன் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து என்எல்சி நிறுவனம் முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் காவல்துறையினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை கைது செய்திருந்தை கண்டித்தும், என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் புதுக்கோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, இளைஞரணி செயலாளர் வீர கமலநாதன், கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், நகரச் செயலாளர் காளீஸ்வரி குமரேசன், கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவர் திருப்பதி, மற்றும் கார்த்திக், வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top