Close
செப்டம்பர் 19, 2024 11:16 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகதிருவிழா அரங்கில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவையோட்டி புதுக்கோட்டை சதுரங்கக் கழகத்தால் ஞாயிற்றுகிழமை சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

போட்டிக்கு புத்தகத் திருவிழா அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். போட்டியை கவிஞர் தங்கம்மூர்த்தி தொடக்கி வகித்தார். அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன், கவிஞர் ஜீவி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

புதுக்கோட்டை

இதில், 75 மாணவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சதுரங்கப் போட்டியில் பங்கேற்றனர்.

பெரியவர்களுக்கான போட்டியில் முதலிடத்தில் பி.ரஞ்சித், இரண்டாமிடத்தில் ஆர்.ஜோதிகா, மூன்றாமிடத்தில் சி.ரவி ஆகியோர் வெற்றி பெற்றனர். சிறுவர்களுக்கான போட்டியில் ஜெயபிரதீபன், அரீஷ் இம்ரன், பால சதுர்த்தியன் ஆகியோர் முறையே மூன்று இடங்ளில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகத் திருவிழா நிறைவு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

புதுக்கோட்டை

போட்டிகளை புதுக்கோட்டை சதுரங்கக் கழக நிர்வாகிகள் பேரா.கணேசன், பார்த்திபன், அடைக்கலவன், அங்கப்பன், நவநீதகிருஷ்ணன், சுதா, தீபா, அறிவியல் இயக்க நிர்வாகிகள் வீரபாலன், ராமதிலகம், ஜெயராமன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்றார். பொருளாளர் டி.விமலா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top