Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

படையெடுத்து வரும் மாணவர்களால் களை கட்டிய புத்தகத் திருவிழா

புதுக்கோட்டை

புத்தகத்திருவிழாவில் திரண்ட மாணவர்கள்

பள்ளி, கல்லூரி மாணவர்கள் படையெடுத்து வருவதால்  புதுக்கோட்டை 6-ஆவது புத்தக்திருவிழாவில் வழக்கம்போல  களைகட்டியது

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து 6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தி வருகிறது. புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களை, பொதுமக்களை ஈர்ப்பதற்காக விழாக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

குறிப்பாக பள்ளிக் கல்விதுறையின் சார்பில் மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசுப் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுப் போக்குவரத்து த்துறையின் வாகனத்திலும், தனியார் பள்ளிகளுக்கு சொந்த வாகனத்திலும் மாணவ, மாணவிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை
புத்தகத்திருவிழாவில் திரண்ட மக்கள்

இதனைத் தொடர்ந்து கடந்த மூன்று நாட்களாக பள்ளி மாணவர்கள் புத்தகத் திருவிழாவை நோக்கி படையெடுத்து வருகின்றனர். மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கோளரங்கை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும், மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் பங்கேற்பதோடு தங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களையும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top