Close
செப்டம்பர் 19, 2024 11:06 மணி

சுதந்திரதினத்தில் வீடுகளில் தேசியக் கொடி… அஞ்சல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை தலைமை தபால் துறையின் சார்பாக சுதந்திர தின விழாவில் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென வலியுறுத்தி நடந்த பேரணி

அஞ்சலக துறையின் சார்பாக சுதந்திர தினவிழாவில் வீடுகளில் அனைவரும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது

76 -ஆவது சுதந்திர தின விழா வருகின்ற (ஆகஸ்ட்)  15 -ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படும் வேளையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 76 -ஆவது சுதந்திர தின விழாவில் சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை எண்ணி பார்க்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்னைத் தொடர்ந்து புதுக்கோட்டை  அஞ்சல்  துறையின் சார்பாக சுதந்திர தின விழாவில் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தேசியக்கொடிகள் அஞ்சல துறையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விழிப்புணர்வை  வலியுறுத்தி  தலைமை தபால் நிலையத்திலிருந்து  தொடங்கிய மேல ராஜவீதி வழியாக திலகர் திடல் சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நிறைவு பெற்றது

தொடர்ந்து சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவர்களிடையே 76 -ஆவது சுதந்திர தின விழாவில் அனைவரும் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என்பதை  எடுத்துரைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top