Close
செப்டம்பர் 19, 2024 11:26 மணி

மன்னர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பேச்சுப் போட்டி

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடந்த பேச்சுப் போட்டி

அண்ணல் அம்பேத்கர், டாக்டர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்றது.

அம்பேத்கர் குறித்த பேச்சுப்  போட்டியில் மதர்தெரசா மருந்தியல் கல்லூரி மாணவி மு.வாணிஸ்ரீ, ஆலங்குடி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவி சே.ராமவிஷ்ணு, கலைஞர் கருணாநிதி அரசு மகளில் கலை, அறிவியல் கல்லூரி மாணவி வீ.ஜெயலெட்சுமி ஆகியோர் முறையே மூன்று இடங்களைப் பெற்றனர்.

கலைஞர் கருணாநி குறித்த பேச்சுப் போட்டியில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி சஸ் ரீனாபிர்தௌஸ், ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி மாணவி செ.ஜோதி, ஆக்ஸீயம் கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஜெ.யமுனா ஆகியோர் முறையே மூன்று இடங்களைப் பெற்றனர்.

பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஐ.சபீர்பானு தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கருவூல அலுவலர் செ.இராஜலெட்சுமி, மன்னர் கல்லூரி முதல்வர் அ.சி.நாகேஸ்வரன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டிப் பேசினர்.

முன்னதாக மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் தி.ரமா வரவேற்க, தமிழ் வளர்ச்சித்துறை உதவியாளர் கி.சுப்புராமன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top