Close
செப்டம்பர் 20, 2024 3:43 காலை

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா நிறைவு

ஈரோடு

ஈரோடு புத்தகத்திருவிழாவின் நிறைவு விழாவில் பேசுகிறார், மேனாள் தலைமைச்செயலர் வெ. இறையன்பு

19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவுவிழா 15.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.சி. துரைசாமி தலைமை வகித்தார். இயக்குநர் சாந்திதுரைசாமி முன்னிலை வகித்தார்,

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்,

தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்  முனைவர் வெ.இறையன்பு  நிறைவுவிழாப் பேருரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில், பல்வேறு அறிஞர்களின் கருத்துகள், குழந்தைகளின் கல்வி குறித்த மாற்றுச் சிந்தனை, பல்வேறு புத்தகங்கள் பற்றிய அறிமுகம், வாழவின் அழகியல் ஆகியவற்றை குறிப்பிட்டார்.

காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் , ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் பு.ஜானகி இரவீந்திரன், முதன்மைக் கல்வி அலுவலர் ஜே.அ.குழந்தைராஜன், பபாசி தலைவர் எஸ்.வைரவன், மாவட்ட நூலக அலுவலர் இரா.யுவராஜ், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் எஸ்.மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் துணைத்தலைவர் பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் வாசகர்கள் என ஆயிரக்கணக்கானோப்  பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top