Close
செப்டம்பர் 20, 2024 1:20 காலை

காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவை மீட்கக்கோரி காந்தி பேரவையினர் முற்றுகை

புதுக்கோட்டை

சுதந்திர தினத்தில் காந்தி பூங்காவில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மகாத்மாகாந்தி சமூக நலப் பேரவையினர்

சுதந்திர தினத்தைமுன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்தி பேரவையினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்திபூங்காவை மீட்க காந்தி பூங்காவில் காந்திபேரவையின் நிறுவனர் முனைவர் வைர.ந. தினகரன் தலைமையில் காந்திசிலைக்கு மாலைஅணிவித்து கோரிக்கையை வலியுறுத்தி காந்தி பேரவையினர் மற்றும் சமூகநல அமைப்பு உறுப்பினர்கள் முற்றுகைபோராட்டம் நடத்த முற்பட்டனர்.

இதில் காந்திபேரவைநிர்வாகிகள் விஜயலெட்சுமி, நிலவை பழனியப்பன்,மத்தியாஸ்,விஸ்வநாதன்,வெங்கடேசன்,கந்தசாமி, பாப்புலெட்சுமி, உத்திராபதி, மோகனபிரியா, சுப்பையா, ராசு,பத்துரூபாய் இயக்கம் வீரபாண்டியன், தினேஷ்பாபு, செய்யது இப்ராஹிம்,அப்துல் ரஹ்மான், ராஜேந்திரன், வழக்கறிஞர் சந்திரசேகரன், இப்ராஹிம் பாபு உள்ளிட்ட பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்று காந்தி பூங்காவில் உள்ள தனியார் கடைகளை அப்புறப்படுத்த வலியுறுத்தி முற்றுகைபோராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டைநகரகாவல் நிலையஆய்வாளர் மருது தலைமையிலான காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கொடுத்ததன் பேரில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top