Close
செப்டம்பர் 19, 2024 7:11 மணி

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் உலக புகைப்பட தினம்

தமிழ்நாடு

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற உலகபுகைப்படதினமும்முதல்சினிமாகருவியும் நிகழ்வு

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் முதல் புகைப்படக் கருவி மற்றும் திரைப்படக் கருவி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்து சினிமா என்கிற நிலைக்கு தொழில்நுட்ப மாற்றம் நிகழ்த்திய கருவிகளை சேகரித்து பாதுகாத்து வரும்நா. முகமதுஅப்சர் என்ற பதினொன்றாம் வகுப்பு மாணவன் காட்சிப்படுத்தியிருந்தார்.

புதுக்கோட்டை
வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற உலக புகைப்பட தின விழா

முதல் சினிமா கருவியோடு உலகத் திரைப்பட தினத்தை முன்னிட்டு சினிமா தொழில் நுட்பம் வளர்ந்த வரலாறுகளை மாணவன் விளக்கிக் கூறினார். பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் முதல் சினிமா கருவியைப் பார்த்து வியந்து அவற்றோடு செல்பி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிமுதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி மாணவனைப் பாராட்டி பரிசு வழங்கினார். துணைமுதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top