Close
செப்டம்பர் 20, 2024 1:42 காலை

ஈரோடு இளையபாரதம் சிறார் விடுதியில் சர்வதேச மனிதநேய விழா- புகைப்பட தின விழா

ஈரோடு

யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு கிளை சார்பில் சர்வதேச மனிதநேய மற்றும் புகைப்பட தின விழா ஈரோடு இளையபாரதம் சிறார் நல விடுதியில் கொண்டாடப்பட்டது

ஈரோட்டில்  சர்வதேச மனிதநேய விழா மற்றும் புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது.

யூத் ஹாஸ்டல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியாவின் ஈரோடு கிளை சார்பில், சர்வதேச மனிதநேய மற்றும் புகைப்பட தின விழா  கொண்டாடப்பட்டது.

ஈரோடு இளையபாரதம் சிறார் நல விடுதியில் நடைபெற்ற விழாவுக்கு, யூத் ஹாஸ்டல் மாநில துணைத் தலைவர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார். விடுதி தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். முன்னதாக விடுதிச் செயலர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார்.

நிர்வாகக்குழு உறுப்பினர் பிரியா சுகுமார் உலக  மனிதநேய தினம் குறித்தும், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் உலக புகைப்பட தினம் குறித்தும் சிறப்புரை ஆற்றினர்.

கிளை செயலர் முனைவர் ராஜா, தலைவர் சண்முகம் வாழ்த்துரை வழங்கினர்.  விடுதி மாணவர்கள் அனைவருக் கும்  பிரியா பள்ளி உபகரணங்களை வழங்கினார். பொருளாளர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

 விழா ஏற்பாடுகளை கிளைத் தலைவர் சந்திரா தங்கவேல் செய்திருந்தார். விழாவில்  ஹாஸ்டல் நிர்வாகிகள், பொது மக்கள் திரளாக பங்கேற்றிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top