Close
செப்டம்பர் 20, 2024 1:27 காலை

விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஊழியர் குடும்பத்துக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாடு

முதலமைச்சர் நிவாரண நிதி அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே நேற்று (23-8-2023) இரவு நடந்த
சாலைவிபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ஆரைகுளம், முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கர் ( 33) என்பவர், சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்தி சேகரிப்பிற்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

இளம் வயதில் உயிரிழந்த தொலைகாட்சி ஒளிப்பதிவாளர்  சங்கர் அவர்களது குடும்பத்தினருக்கும்உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஐந்து இலட்சம் ரூபாயும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சருக்கு நன்றி..

விபத்தில் உயிரிழந்த புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு  நிவாரணநிதி வழங்கி உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top