Close
செப்டம்பர் 19, 2024 11:17 மணி

புதுக்கோட்டையில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்னா

புதுக்கோட்டை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள்.

கூட்டுறவு வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை ஓய்வூதியம் ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகம் முன்பு வியாழக்கிழமை  பிற்பகல்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் (ஏஐபிஇஏ), தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் இந்த தர்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.என். ராஜேந்திரன் தலைமை வகித்தார், மாவட்டச் செயலர் எஸ்.ஆர். அருணாசலம், பொருளாளர் ஏ. தனபால் உள்ளிட்டோரும் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஏற்கெனவே நிலுவையில் உள்ள கோரிக்கைகளை கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top