Close
செப்டம்பர் 20, 2024 1:31 காலை

வாசகர் வட்டம் சார்பில் புதுக்கோட்டையில் நூலகர் தின விழா

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வாசகர் வட்டம் சார்பில் நூலக தின விழா

நூலகத் தந்தை – அய்யா. அரங்கநாதன் (ஆகஸ்ட் 12) பிறந்த நாளை முன்னிட்டு நூலகர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இது குறித்து நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரிய சேவை ஆற்றிவரும் நூலகர்கள் அனைவரையும் திரட்டி மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா  தலைமையில் நூலகர் தின விழா  நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு 25-8-2023 வெள்ளிக்கிழமை மாலை 4. மணிக்கு நூலகர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இதைத்தொடர்ந்து 5.மணிக்கு நடைபெறும் விழாவில் வெற்றி பெறும் ஐவருக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசும் வழங்கப்படுகிறது.

இது தவிர, அதிக உறுப்பினர்கள் சேர்த்தவர்கள், அதிக புரவலர்கள் சேர்த்தவர்கள், அதிக நன்கொடைகள் பெற்றவர்கள் மற்றும் முனைப்புடன் செயலாற்றிய நூலகர்கள்
அனைவருக்கும்  மாவட்ட ஆட்சியர் கேடயங்கள் வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

விழா ஏற்பாடுகளை மாவட்ட நூலக அலுவலர், ஊழியர்கள் மற்றும்  புதுக்கோட்டை நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் செய்துள்ளதாகவும் கவிஞர் தங்கம்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top