Close
செப்டம்பர் 20, 2024 5:33 காலை

தமிழகம் முழுவதும் மின்கல பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

தமிழகம் முழுவதும் மின்கலப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்

இந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 -ஆம் தேதி முதல் நடக்க உள்ள மாநில அளவிலான இளையோர் தடகள போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் போட்டி  (செப்.8) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அதை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தொடக்கி வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் சிவசங்கர் மேலும் கூறியதாவது: சென்னை மாநகரத்தில் முதற்கட்டமாக 100 மின்கலப் (Electric) பேருந்துகளை பரிசோதனை முயற்சியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அடுத்தடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் மின்கலப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள 685 காலி பணியி டங்களை நிரப்ப, ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும். கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், தற்போது பேருந்து சேவையானது பல இடங்களில் தடைபட்டுள்ளது.
இதனை சரி செய்து வருகிறோம். புதுமைப் பெண் திட்டத்தால் அரசு பள்ளிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பேருந்துகளில் கூட்டமும் அதிகரித் துள்ளது.

எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும். ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன்களை வழங்கு வதற்காக தமிழக முதல்வர் ரூ.1500 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளார். அதனைக் கொண்டு ஓய்வூதியதாரர்களுக்கு பணப் பலன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.  இன்னும் 4, 5 மாதங்கள் மட்டுமே பாக்கி உள்ளது. அவர்களுக்கும் விரைவில் பணப் பலன்கள் வழங்கப்படும்.

புதியதாக 4 ஆயிரம்  பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் திறக்கப் பட்டு விட்டது. இன்னும் மூன்று நான்கு மாதத்திற்குள் 4 ஆயிரம் புதிய பேருந்துகள், தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும். எல்லா பேருந்துகளையும் நிறம் மாற்ற நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புறநகர் பேருந்து களை மட்டுமே நிறம் மாற்றுகிறோம்.

மேலும், புறநகர் பேருந்தில் சீட் எண்ணிக்கை 5 குறைக்கப் பட்டுள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் பயணிக்கும் வகையில் இந்த வசதி செய்யப்பட்டு உள்ளது. பேருந்துகளுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்பது நீண்ட கால பிரச்சனை. அது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடித்தள சட்டம்  நல்லநிலையில்  உள்ள பேருந்துகளில்  1,500  பேருந்து கள் தேர்வு செய்யப்பட்டு, அதனை புதிதாக கூடு கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

மேலும் சென்னை மாநகரத்தில் ஓடும் இரண்டு ஆயிரத்து ஐநூறு பேருந்துகளில், நிர்பயா திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமராக்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பேருந்துகளில் படிப்படியாக சிசிடிவி கேமரா பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும் என்றும்  அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top