Close
ஜூலை 7, 2024 11:07 காலை

மின்கம்பி அறுந்து விழுந்து 4 மாடுகள் பலி

புதுக்கோட்டை

புதுகை அருகே மின்சாரம் தாக்கி மாடுகள் பலி

புதுக்கோட்டை அருகே  வயலில் மின்கம்பி அறுந்து விழுந்ததால், அங்கே மேய்ந்து கொண்டிருந்த 4 மாடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
புதுக்கோட்டை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. அப்போது, சுமார் 5 மணியளவில் கவிநாடு மேற்கு வட்டம் அத்திரிப்பட்டி பகுதியில் வயல்வெளியில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
அந்த வழியே சென்ற மின்கம்பம் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதனால், வயலில் மேய்ந்து கொண்டிருந்த செல்வராஜ், பழனியப்பன், மாரிமுத்து, சந்திரசேகர் ஆகியோரின் 4 பசுமாடுகளும் ஒரு காளைக் கன்றும் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தன.
இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மின்நிறுத்தம் செய்யப்பட்டது. ஒரே பகுதியில் 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருக்கோகர்ணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top