Close
ஜூலை 2, 2024 2:00 மணி

தமிழ்வளர்ச்சித்துறை பேச்சுப் போட்டியில் வென்ற அரசு ஊழியர் களுக்கு ஆட்சியர் மெர்சிரம்யா பரிசளிப்பு

புதுக்கோட்டை

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.

அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர் களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் கள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற அரசு ஊழியர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றோர்களுக்கு, பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.

அரசு ஊழியர்களின் பேச்சுத் திறமையையும், படைப்பாற்ற லையும் வளர்க்கும் நோக்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுரைக்கிணங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை
பேச்சுப்போட்டியில் வென்ற அரசு ஊழியருக்கு பரிசளித்த ஆட்சியர்

இப்போட்டியில் வெற்றி பெற்று, முதல் பரிசு பெற்ற தனி மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தைச் (நி.எ.) (தே.நெ.) சேர்ந்த வட்டாட்சியர் ஆ.திருநாவுக்கரசு -வுக்கு  ரூ.3,000- மற்றும் பாராட்டுச் சான்றிதழினையும், இரண்டாம் பரிசு பெற்ற மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சி) அலுவலகத்தினைச் சேர்ந்த உதவியாளர் சை.சையது நூர் முஹம்மதுவுக்கு  ரூ.2,000- மற்றும் பாராட்டுச் சான்றிதழினையும்,

புதுக்கோட்டை
பேச்சுப்போட்டியில் வென்ற அரசு ஊழியருக்கு பரிசளித்த ஆட்சியர்

மூன்றாம் பரிசு பெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாட்சியர் அ.சோனைக் கருப்பையா வுக்கு ரூ.1,000 – மற்றும் பாராட்டுச் சான்றிதழினையும்,  ஆட்சியர்  12.01.2024 அன்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top