Close
ஜூலை 4, 2024 5:14 மணி

திருவொற்றியூர் மண்டல அலுவல கத்தில் குடியரசு தினவிழா

சென்னை

திருவொற்றியூர் மண்டல அலுவல கத்தில் குடியரசு தினவிழாவில் காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செய்கிறார் மண்டலத்தலைவர் தி.மு.தனியரசு

திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் மண்டலக்குழுத்தலைவர் தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடி ஏற்றினார்.

இந்தியகுடியரசு தின 75 -ஆம் ஆண்டு விழா முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மண்டல குழு அலுவலகத்தில் தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடி ஏற்றி வைத்து மகாத்மாகாந்தி உருவப் படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தி குடியரசு தின வாழ்த்துக்கள் கூறி இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதன்பின்னர் மண்டல அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த ஆண்பெண் மாற்றுத் திறனாளிகள் கழிவறைகளைதிறந்து வைத்தார்.முன்னதாக திருவொற்றியூர் மூத்த பத்திரிகை யாளர்கள் கி.மணிவாசகம் உட்பட 6 பேருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை
திருவொற்றியூர் மண்டல அலுவல கத்தில் குடியரசு தினவிழாவில் மண்டலத்
தலைவர் தி.மு.தனியரசு தேசிய கொடி ஏற்றினார்

இந்த நிகழ்வில், செயற் பொறியாளர் ஷேக் சபீர் உசேன்,உதவி பொறியாளர்கள் ஜெயகுமார், ஆனந்தராவ்பாபு,சம்பத் குமார், தினேஷ், கோதண்ட ராமன், ஏஆர்ஓ.சுரேஷ்,மேலாளர் அன்பழகன், மின்துறை கோ.மகேந்திரன், தர்மலிங்கம், திமுக நிர்வாகிகள் தமிழ்செல்வன், பாலசுந்தரம் மோகன்ராஜ் மற்றும் அனைத்து துறை மண்டல அலுவலக அதிகாரிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top