Close
ஜூலை 2, 2024 1:52 மணி

நியூஸ் 7 தொலைக்காட்சி பல்லடம் செய்தியாளர் மீது தாக்குதல்: புதுக்கோட்டை(யில்) பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர் சங்கத்தினர்

பல்லடம் செய்தியாளர் நேசபிரபு கயவர்களாலும் கொடியவர் களாலும் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை  மாவட்டத்தில் மட்டும் பொன்னமராவதி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, விராலிமலை  உள்ளிட்ட தாலுகா தலைமையிடங்களில் புதுக்கோட்டை  மாவட்ட  பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில்,  புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு, தலைவர் சு. மதியழகன்  தலைமை வகித்தார்.

பொருளாளர் கே. சுரேஷ் முன்னிலை வகித்தார். செயலாளர் சா. ஜெயபிரகாஷ் தொடக்கி வைத்தார். இதில், பல்வேறு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள்  கலந்து கொண்டு கண்டன முழக்கமிட்டனர். நிறைவாக மா.மு. கண்ணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top