Close
ஜூலை 7, 2024 9:59 காலை

திருவொற்றியூரில் ராட்சத கடல் அலையில் சிக்கிய 4 மாணவர்கள்

சென்னை

திருவொற்றியூர் கடற்கரையில் ராட்சத அலையில் இழுத்துச்செல்லப்பட்ட 4 பேர்

சென்னை திருவொற்றியூரில் சனிக்கிழமை கடலில்  குளித்த 4 பள்ளி மாணவர்கள் ராட்சத கடல் அலையில் சிக்கினர். இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இரண்டு பேர்ரகளின் நிலை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்த வர்கள் ஷ்யாம், சந்தோஷ், புவனேஷ், விஜய் இவர்கள் நான்கு பேரும் இங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
சனிக்கிழமை விடுமுறை என்பதால் நான்கு பேரும் மாநகரப் பேருந்து மூலம் புது வண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பேருந்து நிலையத்தில் இறங்கி அங்கிருந்து திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பத்திற்கு வந்துள்ளனர். பின்னர் இங்குள்ள கடலில் குளித்துள்ளனர்.
அப்போது திடீரென ராட்சத அலை ஏற்பட்டு நான்கு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் விஜய் என்ற மாணவன் மட்டும் அலையில் தள்ளாடி பின்னர் அருகிலிருந்த கடல் அரிப்பு தடுப்புச் சுவர் பாறையில் சிக்கிக் கொண்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த அங்கிருந்த மீனவர்கள் உடனடி யாக கடலுக்குள் சென்று தேடும் பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது விஜயை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.  மீதமுள்ள மூன்று பேரையும் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கிய பள்ளி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடல் அரிப்பு தடுப்புச் சுவர் பாறை கற்கள் இடுக்கில் சந்தோஷ் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. பின்னர் மாணவர் சந்தோஷின் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர் .
மீனவர்களால் மீட்கப்பட்ட விஜய் என்ற மாணவன் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாயமான ஷ்யாம்,  புவனேஷ் ஆகிய இரண்டு மாணவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து தீயணைப்பு படையினர் மீனவர்களுடன் இணைந்து தேடும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஒரே இடத்தில் நான்கு பேர் ராட்சத அலையில் சிக்கிய சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top