Close
ஜூலை 7, 2024 9:44 காலை

இந்திய பத்திரிக்கைகள் தினம்: முகவர்கள், தொழிலாளர்களுக்கு வாசகர் பேரவை வாழ்த்து

புதுக்கோட்டை

நாளிதழ் வினியோகிக்கும் முகவர்களுக்கு இந்திய பத்திரிகை தின வாழ்த்துகளை தெரிவிக்கு வாசகர் பேரவை நிர்வாகிகள்

 ஜனவரி 29 , ” இந்திய பத்திரிக்கைகள் தினம். ” 1780 , ஜனவரி 29 அன்று ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயர் Bengal Gazette or Calcutta General Advertiser என்ற ஆங்கில வாரப் பத்திரிக்கையை வெளியிட்டார். இது தான் இந்தியாவின் முதல் பத்திரிக்கை. கொள்கைப் பிடிப்போடு, அச்சமின்றி எழுதியதற்காக இந்தியாவில் முதன் முதலில் சிறை சென்ற வரும் அவரே.

இந்த தினத்தில், அதிகாலையில் இல்லந்தோறும், நாள் நேரம் பாராமல் செய்தித்தாள்களை விநியோகம் செய்யும் நபர்களையும், முகவர்களையும் அவர்கள் செய்தித்தாள் எடுக்கும் இடத்திற்கே சென்று வாழ்த்தி, இனிப்பு வழங்கி கெளரவம் செய்யும் நிகழ்வை, புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் மரம் நண்பர்கள், நான்காவது ஆண்டாக செய்து வருகிறார்கள்.

அந்த நிகழ்வு புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் மூப்பது ஆண்டுகளுக்கு மேலாக செய்தித்தாள் விநியோகம் செய்யும் செல்வம் உட்பட 25 நபர்கள் மற்றும் முகவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி கெளரவம் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை
கௌரவிக்கப்பட்ட பத்திரிகை முகவர்கள், தொழிலாளர்கள்

வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், மரம் நண்பர்கள் செயலர் ப.ராதாகிருஷ்ணன் (எ) கண்ணன், உறுப்பினர் பொறியாளர் வி.இறையன்பு ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top