Close
ஜூலை 7, 2024 11:28 காலை

திருமயத்தில் நள்ளிரவில் மூடப்பட்ட ஜவுளிக்கடையின் வெளியே தொங்கிய புத்தாடைகள்: உரிமையாளருக்கு தகவல் அளித்த இளைஞர்களுக்கு பாராட்டு

புதுக்கோட்டை

இளைஞர்களை பாராட்டி போலீஸார் மற்றும் ஜவுளிக்கடை உரிமையாளர்

திருமயத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த   ஜவுளிக்கடையின் வெளியில் புத்தாடைகள் தொங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்து கடையின் உரிமையாளருக்கு போன் செய்து தகவல் கொடுத்த இளைஞர்களுக்கு  பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ஓய்கா என்ற ஜவுளிக்கடை இயங்கி வருகிறது. இந்நிலையில்  கடையின் பணியாளர் கடையை மட்டும் மூடிவிட்டு வெளியே இருந்த உடைகளை எடுத்து உள்ளே வைக்க மறந்து விட்டுச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதிக்கு இரவு நேரத்தில் நண்பர்களுடன்  தேனீர் அருந்த வந்த இளைஞர்கள் சிலர் கடையின் உடைகள் வெளியே தொங்குவதை  பார்த்துள்ளனர். உடனே அந்த இளைஞர்கள் உடனே கடையின் உரிமையாளருக்கு தொலைபேசியில் அழைத்து தகவல் தந்ததோடு அதனை இன்ஸ்டகிராம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து அந்தக் கடையின் உரிமையாளர் இளைஞர்களை நேரில் அழைத்து  விருதுகள் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top