Close
ஜூலை 7, 2024 10:06 காலை

ரூ.50 லட்சம் செலவில் பூங்கா நவீனமயம்

சென்னை

செவ்வாய்க் கிழமை அடிக்கல் நாட்டிய எம்பி. கலாநிதி வீராச்சாமி

ரூ.50 லட்சம் செலவில் பூங்கா நவீனமயமாகிறது.

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகிலுள்ள  அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவில் புத்தக வாசிப்பு மையத்தை திறந்து வைத்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அஜாக்ஸ், காந்திநகர் ஆகிய இடங்களில் உள்ள பூங்காக்களை மேம்படுத்தும் திட்டத்திற்கு  வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி செவ்வாய்க் கிழமை அடிக்கல் நாட்டினார்.

நிகழ்வில், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மேற்கு பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன், மாமன்ற உறுப்பினர் கே.பி.சொக்கலிங்கம், தொழிலதிபர் எஸ்.டி. சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top