Close
ஜூலை 4, 2024 4:15 மணி

சோழவந்தானில் தமிழக தேசிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

சோழவந்தானில் தமிழர் தேசிய கழகம் மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சோழவந்தான்.

தென்காசி அருகே முருகன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, சோழவந்தானில் தமிழர் தேசிய கழகம் மதுரை மேற்கு மாவட்டத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், படுகொலையில் ஈடுபட்ட மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்யக்
கோரி, கண்டன கோசங்களை எழுப்பினர். சோழவந்தான் காமராஜர் சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசை கண்டித்தும் தமிழக காவல்துறை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தமிழர் தேசிய கழகத்தின் சார்பில் மாநில இளைஞரணி தலைவர் ஜே. பி. குமார் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார்.

மேலும், மதுரை மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், மதுரை மாவட்ட தலைவர் சுந்தர் குமார், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலா, மதுரை மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் விக்னேஷ், வாடிப்பட்டி ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகானந்தம், வாடிப்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் அஜித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கண்டன உரை துணைச் செயலாளர் பி எம் நவீன் குமார், தலைமை கழக செயலாளர் மு. கா. பிரபு துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சங்கர் வழக்கறிஞர் தீரன் திருமுருகன் பொதுச் செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசினார்கள். நிறைவுறையாக வழக்கறிஞர் மு. கா .வையவன் நிறுவனத் தலைவர் சிறப்புரை
யாற்றி கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top