Close
செப்டம்பர் 20, 2024 3:40 காலை

குடியாத்தம் நகராட்சியில் பயணியர் நிழற்கூடம் திறப்பு..!

புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை வேலூர் எம்.பி டி.எம்.கதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

குடியாத்தம்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு அசோக் நகர் பகுதியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடம் திறப்பு விழா திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை மாநில ஓட்டுநர் அமைப்புசாரா தலைவர், வேலூர் எம்.பி டி.எம்.கதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அதேபோல, குடியாத்தம் அடுத்த கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் எம்.பி.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதியதாக கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை மாநில ஓட்டுநர் அமைப்புசாரா தலைவர், வேலூர் எம்.பி டி.எம்.கதிர் ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார்.

இவ்விரு நிகழ்வில், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலு விஜயன், நகரமன்ற தலைவர் எஸ்.சௌந்தரராஜன், ஒன்றிய கழக செயலாளர்கள் கள்ளூர் கே.ரவி, சீதாராமன், நகர மன்ற உறுப்பினர், நகர துணைச் செயலாளர் ம.மனோஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.சத்தியமூர்த்தி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கே.கண்ணன், நகர நிர்வாகிகள் கோ.நெடுஞ்செழியன்
ந.ஜம்புலிங்கம், வசந்த் ஆறுமுகம், கவிஞர் பாரி, பெரிய.கோடீஸ்வரன், கே.தண்டபாணி உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

வேலூர் – சசிகுமார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top