மதுரை :
மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோயில் உண்டியலில் இருந்து 34,52,949 ரூபாய் ரொக்கமும், 51 கிராம் தங்கமும், 2 கிலோ 10 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது.
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பரமணியசுவாமி கோயிலில்,உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூபாய் 34 லட்சத்து 52 ஆயிரத்து 949 ரூபாய் ரொக்கமாகவும், 51 கிராம் தங்கமும்,2 கிலோ 10 கிராம் வெள்ளியும் உண்டியல் மூலம் கிடைக்கப் பெற்றது.
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த மாதத்திற்கான உண்டியல் இன்று திறந்து எண்ணப்பட்டது. அதில் பணம் ரூ.34 லட்சத்து, 52 ஆயிரத்து 949 ரூபாய், தங்கம் 51 கிராம், வெள்ளி 2 கிலோ 10கிராம் இருந்தது.
இதில், திருப்பரங்குன்றம் கோயில் கண்காணிப்பாளர் முன்னிலையில் திருப்பரங்குன்றம் பக்தர்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் இந்த உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
எவ்வளவு காணாமல் போச்சோ