Close
ஜூன் 6, 2025 2:27 மணி

காஞ்சிபுரத்தில் 76வது குடியரசு தின விழா : மாவட்ட ஆட்சியர் கொடியை பறக்கவிட்டார்..!

அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர்

நாட்டின் 76 வது குடியரசு தின விழாவான இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க திடலில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதனை யொட்டி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி விட்டு, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் முவர்ண பலூனையும்,வெள்ளை புறாக்களையும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பறக்கவிட்டார்.

பல்வேறு துறைகளின் கீழ் 29 பயனாளிகளுக்கு ரூபாய் 76லட்சத்து 76ஆயிரம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top