காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பாக 32 வாக்குச் சாவடிகளில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
காரியாபட்டி மாங்குளம் கிராமத்தில் நிர்வாகிகள் நியமன துவ க்க நிகழ்ச்சி நடை பெற்றது. இதில், ஒன்றியச்செ யலாளர் தோப்பூர் முருகன், மண்டல பொறுப்பாளர் குருசாமி , மற்றும் பலர் கலந்து கலந்து கொண்டனர் தொடர்ந்து காரியாபட்டியைச் சேர்ந்த மாங்குளம் அரசகுளம் குரண்டி, மேலக் கள்ளங்குளம், முஷ்டக்குறிச்சி ஆலங்குளம் நாசர் புளியங்குளம் தொட்டியங்குளம் , வேப்பங்குளம இலுப்பகுளம், முடுக்கன் குளம் தேனூர், மறைக்குளம், துலுக்கன்குளம், தாமரைக்குளம். தோப்பூர் கிழவனேரி உள்ளிட்ட 32 ஊர் களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமன நிகழ்ச்சி நடை பெற்றது.