விழுப்புரம்:
தேசிய குடல் புழு நீக்க நாளை முன்னிட்டு திங்கள்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் குடல் புழு நீக்க மாத்திரை வழங்கலை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பிப்ரவரி 20- ந்தேதி திங்கள்கிழமை வழங்கி, முகாமினை துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட சுகாதார அலுவலர் மரு.செந்தில்குமார், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் உட்பட பலர் உடனிருந்தனர்.