Close
பிப்ரவரி 22, 2025 9:40 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி : நாமக்கல் கலெக்டர் வழங்கல்..!

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நா£ள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலதத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல் :

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகிதத்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம் 435 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 8,610- மதிப்பில் காதொலி கருவிகள், ஒருவருக்கு ரூ. 15,750- மதிப்பில் சக்கர நாற்காலி, 2 பேருக்கு ரூ. 4,472- மதிப்பில் ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் ஒருவருக்கு ரூ. 1,636- மதிப்பில் பிரெய்லி கடிகாரம் உள்ளிட்ட மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ.30,468- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வுழங்கினார். சமூகப்பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் பிரபாகரன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top