Close
பிப்ரவரி 22, 2025 6:48 மணி

திருப்பரங்குன்றம் முருகனை மத்திய இணை அமைச்சர் முருகன் தரிசனம்..!

திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

மதுரை:

மதுரை, திருப்பரங்குன்றம் மலைமீது ஏற முயன்ற மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் தடுத்து நிறுத்தப்பட்டார். பின், போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அனுமதி அளித்தனர்.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகனை தரிசித்துவிட்டு மத்திய இணை அமைச்சர் எல் .முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

ரொம்ப நாளைக்கு பிறகு திருப்பரங்குன்றம் வந்திருக்கிறோம். 2021 வெற்றிவேல் யாத்திரை தமிழக முழுவதும் பாஜக சார்பாக நடத்தப்பட்டது. பகுதியாக அந்த யாத்திரையின் ஒரு பகுதியாக அறுபடை நான் வீடுகளுக்கும் வந்திருந்தேன்.

முதல் படை வீடாக இன்று இந்த முதல் படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்து விட்டு ,நானும், காடேஸ்வர சுப்ரமணியும் வந்திருக்கிறோம். இதைத்தொடர்ந்து, மலை மீது உள்ள காசி விஸ்வநாதரையும் தரிசிக்க உள்ளோம்.

சமீபகாலமாக இந்து மக்களை பல சைவ வழிபாடு செய்கின்ற இந்தப் பகுதியில் வெறும் மட்டகாத சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931 இல் வந்த நீதிமன்ற தீர்ப்பிலேயே ஒட்டுமொத்த மலையும் 33 செண்டை தவிர அட்டவணையில் முருகப்பெருமானுக்கு சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தீர்ப்புக்கு மாறாக 1983 இல் வருவாய் ஆவணங்களில் இருந்த பதிவுகளில் தமிழ்நாடு அரசாங்கம் சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். அலை கட்சியில் 30 ஆண்டுகளாக கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.

1994 தீர்ப்பின் படி தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை மழையின் மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் இந்து அறநிலை என்று சொல்லப்பட்டுள்ள உயர்நீதிமன்ற ஆணையை இந்து அறநிலையத்துறை மதித்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முன்வர வேண்டும். உலகெங்கும் முருகப்பெருமானே வழிபடுகின்ற பக்தர்கள் சார்பாக இந்த கோரிக்கையை வைக்கின்றேன். உடனடியாக இந்து அறநிலையத்துறை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த கோவில் ஒரு சைவ திருத்தலம். கருப்பசாமி மதுரவீரன் போன்ற சாமிகளுக்கு நாம் பலியிடுவது வழக்கம்தான். ஆனால் அது கிராமங்களில் உள்ள காவல் தெய்வங்களை போற்றுவதற்கு பலியிடுவது வழக்கம். எந்த ஒரு முருகப்பெருமான் இருக்கின்ற சைவ வைணவ தளங்களில் பலியிடுதல் என்கிற சம்பவம் கிடையாது.

எப்படி இருக்கும்போது திருப்பரங்குன்றம் மலையின் மீது விரும்பத்தகாத சம்பவங்களை நடத்த முன்வந்து இருந்தால் அல்லது நடத்தியவர்கள் மீது உடனடியாக தமிழ்நாடு அரசாங்கம், காவல்துறை நடவடிக்கை எடுப்பு கைது செய்யப்பட வேண்டும். இங்கிருக்கின்ற பொழுது இங்கு இருக்கும் மக்கள் அமைதியான மக்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொன்னதற்கு எங்கள் தலைவர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிலேயே கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

இந்த பகுதியில் நடைமுறை என்னவோ அதை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து, நடவடிக்கை எடுத்து வருகிறோம் இந்து முன்னணி சார்பாக மாநிலத் தலைவர் போராடிக் கொண்டே இருக்கிறோம்.
நமது உரிமை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top