Close
பிப்ரவரி 22, 2025 1:29 காலை

நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு : நாமக்கல்லில் 21ம் தேதி இலவச பயிற்சி..!

மீன் வளர்ப்பு -கோப்பு படம்

நாமக்கல் :

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தலைவர் டாக்டர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில், வருகிற 21ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, நன்னீரில் அயிரை மீன் வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் மீன்பண்ணைக் குட்;டை அமைக்க இடம் தேர்வு, மண் மற்றும் நீர் பரிசோதனை, பண்ணைக் குட்டை அமைத்தல், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் தேர்வு செய்தல், உணவு மற்றும் நோய் மேலாண்மை முறைகள், திட்ட அறிக்கை தயாரித்தல், மத்திய மாநில அரசுகளின் பல்வேறு மானியத் திட்டங்கள், சந்தைப்படுத்துதல் முறைகள் பற்றியும் இப்பயிற்சியில் விரிவாக கற்றுத்தரப்படும்.

மேலும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளும், நாமக்கல் மாவட்ட மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சியில், வேலையில்லாத பட்டதாரிகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் முதுநிலை கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பமுள்ளோர் 04286 266345, 266650, 7358594841 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top