மதுரை:
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சேமிக்கும் குப்பைகளை டிராக்டர் லாரி மற்றும் வேன் மூலமாக சேமித்து மதுரை வெள்ளக் கல்லுக்கு கொண்டு செல்கிறார்கள்.
ஆனால், கொண்டு செல்லும் வாகனங்கள் முறைப்படி குப்பைகளை மூடியோ அல்லது வாகன கொள்ளளவுக்கு ஏற்பவோ குப்பைகளை ஏற்றாததால் குப்பைகள் சாலை முழுவதும் ஆங்காங்கு இறைத்துச் செல்கிறது.
இவ்வாறு குப்பைகள் சிந்திச் செல்வதால் சாலை முழுவதுமே குப்பைக் கூடமாக மாறிவிடுகிறது. இதனால் ,வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். இது குறித்து, மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.