மதுரை:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் அனைத்து கட்சி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர் பத்மநாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 80 பெண்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.