மதுரை:
மதுரை தெற்கு ஆவணி மூல வீதி அருகே, தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை சார்பில் மகளிர் தின விழா வெகு விமர்சையாக (மார்ச்.30) நடைபெற்றது.
இதில் ,தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில், ஆசிரியரும் பட்டிமன்ற பேச்சாளருமான சிவ சத்யாவிற்கு சாதனை பெண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.