Close
ஏப்ரல் 7, 2025 2:33 மணி

காஞ்சிபுரம் ஆட்சியர் வளாகத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம்..!

வணிகவரி அலுவலக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ எழிலரசன்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ 4.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை எம் எல் ஏ எழிலரசன் தொடங்கி வைத்தார்..

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வகையில் 1977-ல் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வணிகவரித்துறை ஒருங்கிணைந்த துறையாக இருக்கும் நிலையில் கட்டப்பட்ட கட்டிடம் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தற்போது நிலைகேற்ற வசதிகள் இல்லை.

இக்கோரிக்கு ஏற்று தமிழக அரசு வணிகவரித்துறை சார்பில் ரூபாய் 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு உத்தரவிட்டது.

அவ்வகையில் , இன்று காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் புதிய ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலக கட்டிடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.

இந்த புதிய அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் மாநில வரி அலுவலர், உதவி ஆணையர் அலுவலகம் இணை ஆணையர் அலுவலகம் , புள்ளியியல் பிரிவு என பல அலுவலகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி காஞ்சிபுரம் மாவட்ட வணிகவரித்துறை இணை ஆணையர் வள்ளி, துணை ஆணையர் நெய்தாளி , உன் பொதுப்பணித்துறை பொறியாளர் சிவ சண்முகசுந்தரம் உதவி பொறியாளர் நந்தினி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top