அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், 66 பாறைப் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தாலம்மன் சுவாமி பங்குனி உற்சவ விழாவில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் பெண்கள் – ஆண்கள் அக்கினிசட்டி எடுத்து ஊர்வழம்மாக வந்து கோவிலை சுற்றி வந்து நிறைவேற்றினர்.
மேலும், பக்தர்கள் உடல் முழுக்க யார் என்று தெரியாத அளவிற்கு வேடம் அணிந்து தாங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர். இதற்கான ஏற்பாடுகளை, 66 பாறைப் பட்டி கிராமத்தின் சார்பாக கிராம பூசாரி அழகப்பன் நாட்டாமை பிரவத் தேவர் கிராமக் காவல்காரர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் தலமையில் நடைபெற்றது.