தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பிற்கு மாநில துணைத்தலைவராக எம்.பஷீர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் மற்றும் மாநில பொருளாளரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
சென்னை, கே.கே.நகரில் உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில், வணிகர்களின் பாதுகாவலர் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோரை, பேரமைப்பின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.பஷீர் அகமது நேரில் சந்தித்து சால்வை அணிவித்து, தனது மகிழ்வையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.