Close
ஏப்ரல் 23, 2025 8:10 மணி

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி : மதுரை விமான நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு..!

மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு

மதுரை.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக, மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் பாதுகாப்பையொட்டி காவல்துறை அவ்வழியாக வரும் வானங்களை சோதனை செய்து அனுப்புகின்றனர்.காஷ்மீரில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதன் எதிரொலியாக, இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவற்றில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மதுரை விமான நிலையத்தில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகு காவல்துறையினர் அனுமதிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top