இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் போட்டியில் காஞ்சி வீராங்கனை கயல்யா இரண்டு தங்கம் வென்ற நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சர்வதேச அளவிலான ஸ்பீட் ஸ்கேட்டிங் சேலஞ்ச் 2025 க்காண போட்டி இந்தோனேஷியாவில் கடந்த 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் இந்தியா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.
500 மீட்டர் ,ஆயிரம் மீட்டர், 10 ஆயிரம் மீட்டர் என மூன்று பிரிவுகளின் கீழ் பல்வேறு வயது அடிப்படையில் நடைபெற்றது.
இதில் இந்தியா முழுவதும் இருந்து 36 வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில் காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் அகடமி சார்பில் 15 கீழ் வயதினற்கான போட்டியில் காஞ்சிபுரம் ஒன்றுதான் வகுப்பு பள்ளி மாணவியான எஸ்.கயல்யா பங்கேற்று ஆயிரம் மீட்டர் மற்றும் பத்தாயிரம் மீட்டர் ஆகிய இரு பிரிவுகளில் தங்கம் என்று சாதனை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு அகாடமி சார்பில் பாராட்டு விழா நிறுவனர் சீனிவாசன் தலைமையில் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான பெற்றோர்கள் தங்கம் என்ற சிறுமிக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் நிறுவன சார்பில் அவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
இதேபோல் கோவா, பல்லடம் திருவள்ளூர் ஆகிய பகுதியில் நடைபெற்ற மாநில அளவிலான ரைப்பிள், சிலம்பம், வில்வித்தை ஆகிய போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற 50க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இவர்களுக்கும் பெற்றோர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை பயிற்சியாளர் பாபு பயிற்சியாளர்கள் தமிழ், பாபு , தர்மேஷ், ஹரிஹரன் மற்றும் பெற்றோர்கள் என பலர் இருந்தனர்.