ரூ 4.6 ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெரியகாஞ்சிபுரம் ஜவகர்லால் நேரு காய்கறி சந்தையினை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
மல்டி லெவல் பார்க்கிங் பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என எம்எல்ஏ எழிலரசன் தெரிவித்தார்
1929-ஆம் ஆண்டு ஜாக்ஸன் மார்க்கெட் என்ற பெயரில் காய்கறி சந்தை உருவாக்கப்பட்டது. இதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஜாக்ஸன் மார்க்கெட் நேரு மார்க்கெட் என பெயர் ஆனது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செங்கழுநீரோடை வீதியில் 40 கடைகள் கொண்டு, இயங்கி வந்த ஜவஹர்லால் நேரு மார்க்கெட், தற்போது பொதுமக்கள் வந்து செல்லவும் வாகனங்கள் நிறுத்தவும் போதிய இட வசதியில்லாமல் காணப்பட்டது.
மேலும் இதனால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் , சுமார் ரூ4.6 கோடி மதிப்பீட்டில் சந்தை புதுப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாநகராட்சி பணிகளை துவங்கியது.
அனைத்து பணிகளும் நிறைவுற்று இருந்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் நடைபெற்ற பல்வேறு துறைகள் சார்பில் புதிய திட்டங்களும் மக்கள் நல பணிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதில் ஓரு நிகழ்வாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் இந்த ஜவஹர்லால் நேரு சந்தையில் காணொளி காட்சி மூலமாக முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் உள்ளிட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
புதியதாக கட்டப்பட்டுள்ள இந்த சந்தை வளாகத்தில் என்பது கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அசைவ உணவுகள் விற்பனை செய்வதற்காக வணிக வளாகம் பின்புறம் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தைக்கு வரும் வாகனங்கள் பொருட்களை இறக்க தனி வழி அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இவ்வளாகம் காணப்படும் என சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.
நேரு காஞ்சிபுரத்தில் மல்டி லெவல் வாகன நிறுத்தம் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நகரில் போதுமான அரசு நிலம் இல்லாததால் அதன் பணி சற்று தொய்வு உள்ளது. விரைவில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.