வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் மதுக்கூர் வட்டாரம் அண்டமி கிராமத்தில் கிசான் கோஸ்திஸ் .நிகழ்ச்சி நடந்தது.
மதுக்கூர் வட்டாரம், அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் அண்டமி கிராமத்தில் தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மாலதி தலைமையில் கிசான் கோஸ்திஸ் விவசாயிகள் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடைபெற்றது. விழாவில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்படும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் விதை கிராமத் திட்டம் தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு இயக்கம் போன்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் அதற்கான தகுதிகள் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார் .
ரசாயன உரங்களின் அளவை குறைத்து அசோஸ்பைரில்லம் பாஸ்போ பாக்டீரியா ரைசோபியம் போன்ற உயிர் உரங்களை பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு உரச் செலவு குறைந்து லாபம் அதிகரிப்பது பற்றி எடுத்துக் கூறினார். மேலும் பயிர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் எதிர் உயிரிகளான டிரைகோடெர்மாவிரிடி யின் பயன்பாடு பற்றி விளக்கி கூறினார்.
அண்டமி கிராம முன்னோடி விவசாயிகள் சுமதி பாஸ்கர் வெங்கடாசலம் இளஞ்செழியன் தங்கராசு சக்திவேல் சுமதி ஆகியோர் இயற்கை விவசாயத்தில் தொடர்ச்சியாக ஈடுபடும் போது களை கட்டுப்பாட்டில் உள்ள இடர்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினர். பட்டுக்கோட்டை விதைச்சான்று அலுவலர் சங்கீதா சான்று பெற்ற விதைகளின் முக்கியத்துவம் மற்றும் விதைப்பண்ணை அமைத்து விதை உற்பத்தி செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.
மதுக்கூர் வட்டார கால்நடை மருத்துவர் சங்கர் ஆடு மற்றும் மாடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகள் மற்றும் கால்நடை துறை மானிய திட்டங்கள் பற்றியும் விவசாயிகளுக்கு விளக்கிக் கூறியதோடு தொழில்நுட்ப பிரசுரங்களையும் விவசாயிகளுக்கு வழங்கினார். பட்டுக்கோட்டை கூட்டுறவு சங்க சார்பதிவாளர் முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் உறுப்பினராக சேர்வது பற்றியும் உரங்களின் இருப்பு பற்றியும் எடுத்து கூறினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணன் நுண்ணீர் பாசன திட்டம் பற்றியும் குறைவான நீரில் அதிகமாக லாபம் எடுப்பது பற்றி விளக்கி கூறினார். வேளாண் வணிகத்துறையில் இருந்து கண்காணிப்பாளர் கலந்து கொண்டார். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் குறுவை தொகுப்பு திட்டம் பற்றியும் அதற்கு விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் தெரிவித்தார்.
வேளாண் உதவி அலுவலர்கள் பூமிநாதன் ஜெரால்டு மற்றும் முருகேஷ் கருத்து காட்சி ஏற்பாடு செய்து பல்வேறு வேளாண் தொழில்நுட்பங்களுக்கான துண்டு பிரசுரங்களை வழங்கி விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விழா முடிவில் வேளாண் துணை இயக்குனர் மாலதி 50 விவசாயிகளுக்கு தேசிய உணவு எண்ணெய் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் ட்ரை கோடெர்மா நோய் எதிர் உயிரிமருந்தினை மானியத்தில் வழங்கினார். வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.