அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணையை காரணம் காட்டி பட்டா வழங்காமல் இருக்கும் நிலையை மாற்றி பட்டா வழங்க வேண்டும் என காஞ்சிபுரத்தில் சி பி ஐ (எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்
விஜய் கூறுவது போல் ஒரு காரணத்திற்காக வேட்பாளர் தேர்வு செய்ய அவராலேயே இயலாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் பல வருடங்களாக வீடு கட்டி குடியிருக்கும் குடும்பங்களுக்கு பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் காஞ்சிபுரத்தில் நடைபெறும் என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்திருந்தார்.
அவ்வகையில் இன்று மாவட்ட செயலாளர் நேரு தலைமையில் தாலுக்கா அலுவலகம் அருகே இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் குழந்தைகளுடன் பட்டா கேட்டு பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பல்வேறு வீதிகள் வழியாக வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டா கேட்டு நீண்ட நெடிய காலமாக போராடிவரும் தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் சி பி ஐ எம் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் புறம்போக்கு நிலம் எனும் அரசு ஆவணங்கள் மற்றும் நீதிமன்ற தடை உத்தரவுகளை காரணம் காட்டி ஏழை எளிய மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வரும் இடத்திற்கு பட்டா வழங்காமல் செயல்பட்டு வருகிறது.
கடந்த காலங்களில் இதே மாவட்டத்தில் பணிபுரிந்த ஆட்சியர் , நீர்நிலைகளில் வசித்து வந்த இருளர்களுக்கு ஆயிரக்கணக்கில் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்தார்.
ஆகவே தற்போது கால்நடைகள் மேய்ச்சல் குறைந்து வரும் நிலையில் அதனை அரசு பரிசீலித்து பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் விஜய் வேட்பாளர்களை தேர்வு செய்யும் கட்சிகள் தூய்மையானவர்களை தேர்வு செய்ய வேண்டும் என கூறிய நிலையில் அவரது கட்சியிலேயே அதை செயல்படுத்த முடியாது என தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் மாநகர செயலாளர் ஸ்ரீதர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சங்கர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.