Close
ஜூன் 2, 2025 8:44 மணி

காளையார்கோவிலில் மருதுபாண்டியர் கலையரங்கம் திறப்பு

காளையார்கோவில்

 காளையார்கோவிலில் எம்எல்ஏ- செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட மருதுபாண்டியர் கலையரங்கம்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டது.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட காளையார்கோவிலில் கலையரங்கம் அமைக்க வேண்டும் என்ற  பொது மக்களின்  நெடு நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சம் செலவில் மருதுபாண்டியர் பெயரில் புதிதாக   கலையரங்கம் கட்டப்பட்டது.

இதையடுத்து, காளையார்கோவிலில் மே 31 –ல் நடைபெற்ற நிகழ்வில் சிவகங்கை சட்டப்பேரவை  உறுப்பினர்  பிஆர். செந்தில் நாதன், முன்னாள் அமைச்சர்  ஜி.பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில், ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, ஸ்டீபன் அருள், புல்லுக்கோட்டை சிவாஜி, மாவட்ட பாசறை செயலாளர் பணக்கரை பிரபு ,மாவட்ட  ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமு.இளங்கோவன், மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் நாகராஜன் உள்ளிட்ட மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top