Close
ஜூன் 3, 2025 4:20 காலை

நாமக்கல் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் குறைபாடு ? : எம்எல்ஏ நேரில் ஆய்வு..!

நாமக்கல் மாநகராட்சி 21வது வார்டு, போதுப்பட்டி பகுதியில் பாதள சாக்கடை அமைக்கும் பணியை, எம்எல்ஏ ராமலிங்கம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் குறைபாடு உள்ளதாக வந்த புகாரை அடுத்து, எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டார்.

நாமக்கல் விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகள் மற்றும் ஏற்கனவே விடுபட்ட பகுதிகளில், சுமார் ரூ. 220 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் மூலம் இந்த பணியை செய்து வருகிறது.

பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளில் பல்வேறு இடங்களில் குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்தனர். இதையொட்டி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், மாநகராட்சி 21வது வார்டுக்கு உட்பட்ட போதுப்பட்டி பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அரசு ஒப்பந்த விதிகளின்படி பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறதா என்பதை பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களை அழைத்து, பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல், அரசு விதிமுறைகளின்படி பணிகளை விரைந்து செய்து முடிக்க வேண்டும் எனஅறிவுறுத்தினார். திசா கமிட்டி உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநகராட்சி 21 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top