Close
ஜூன் 3, 2025 4:31 காலை

வெளிப்படையாக நடைபெற்ற முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வு: ஆசிரியர்கள் பாராட்டு..!

ராமு, மாநில தலைவர், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

நாமக்கல் :

தமிழகத்தில் முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வை 100 சதவீதம் வெளிப்படையாக நடத்திய, தமிழக அரசுக்கு முதுகலை ஆசிரியர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது குறித்து, நேரடி நியமனம் பெற்ற, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், நாமக்கல் ராமு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, மேல்நிலைக் கல்விப்பணி அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2024 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் இருந்து விவரங்களும் பெறப்பட்டு அதன் அடிப்படையில், ஆசிரியருடன் உபரி என கண்டறியப்பட்ட, முதுகலை ஆசிரியர்களை, அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்ப தகுந்த காலிப் பணியிடம், கூடுதல் தேவை உள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் மூலம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

பணி நிரவல் கலந்தாய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போதைய மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப முதுகலை ஆசிரியர் கூடுதல் தேவை உள்ள பள்ளிகள் மற்றும் 31.5.25 வரை ஓய்வு பெற உள்ள முதுகலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் பட்டியலையும் முழுமையாக வெளியிடப்பட்டு உபரி முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு 100 சதவீதம் நேர்மையாக, வெளிப்படையாக நடைபெற்றது.

இதனால் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான முதுகலை ஆசிரியர்கள் பயனடைந்துள்ளனர். 100 சதவீதம் வெளிப்படையாக கலந்தாய்வு நடத்திய தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு சங்கத்தின் சார்பில் பாராட்டுதலும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top