பள்ளிக்கு துவங்கிய முதல் நாளிலேயே 1,04,142 மாணவ , மாணவயிர்களுக்கு புத்தகம் , சீருடை, காலணி என 14 வகையான பொருட்களை வழங்கும் நிகழ்வினை கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை கடந்த வாரமே பள்ளிகளுக்கு அனுப்பி உள்ளது.
இந்நிலையில் பள்ளி திறந்த முதல் நாளே அனைத்து மாணவர்களுக்கும் சீருடை புத்தகம் நோட்டு புத்தகம் காலணி புத்தகப் பை உள்ளிட்ட அனைத்து விலையில்லா கல்வி பொருட்களையும் வழங்கும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அனுப்பியது.
அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் அடுத்த தாமல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா கல்வி பொருட்களை தமிழக கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 657 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து நான்காயிரத்து 142 மாணவ மாணவியர்களுக்கு இந்த விலையில்லா கல்வி பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
இதில் நாலு லட்சத்து 57 ஆயிரத்து 415 பாட புத்தகங்களும், ஏழு லட்சத்தி 66 ஆயிரத்து 856 நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாட புத்தகம் மற்றும் நோட்டுப் புத்தகத்தில் குழந்தைகள் அவசர உதவி மைய எண் 1098 மற்றும் மன உளைச்சல், உயர்கல்வி வழிகாட்டுதலுக்கு உதவும் மைய என்னன 14417 ஆகிய விழிப்புணர்வு விவரங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பாடப் புத்தகங்கள் நோட்டுப் புத்தகங்களில் அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி எம்.பி செல்வம், எம்.எல்.ஏ எழிலரசன், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்